திங்கள், 21 பிப்ரவரி, 2011
செவ்வாய், 15 பிப்ரவரி, 2011
தலைமைப் பண்பு
தன்னலம் தவிர்த்தார் ;தலைவர் ஆனார்.
தியாகமும்,சேவையும் தலைவரின் இன்றியமையா இரு குணங்கள்.
இயலாதோரையும் ஏற்றமுறச் செய்வார் இனிய தலைவர்.
வழியாக அமைபவனும்,வழியை அமைப்பவனும் மாபெரும் தலைவன்.
அறிவையும்,உணர்வையும் சமநிலைப்படுத்துபவன் உயரிய தலைவன்.
பாதையை அறிவது மட்டுமன்று ;பாதையாக ஆவதும் உயரிய தலைமை.
ஒன்றாக இருப்பதும்,ஒருங்கிணைப்பதும் உத்தமத் தலைவன் இலக்கணம்.
மாண்பாக நடப்பவர் மதிப்பான தலைவர்.
தருவதில் மகிழ்பவர் தன்னிகரில்லாத் தலைவர்.
இயங்கிக் கொண்டே இருப்பதைவிட,இயக்கிக் கொண்டே
இருப்பது இனிய தலைமை.
உரிமையை உணர்ந்து,உண்மையை உரைப்பவர் உயரிய
தலைவர்.
திசையைத் தெளிவாக்கி,விசையை நெறிப்படுத்துபவர்
விண்ணுலகையும் ஆளும் தலைவர்.
(நன்றி;தூதன்)
தலைமையேற்கும் தன்னிகரில்லாப் பண்பு கொண்டவர்கள் ,தரணியை வெல்லும் தனித்தன்மை கொண்டவர்கள்.இவர்கள் புரிவது கர்ம யோகம்;
இவர்கள் செய்ய வேண்டியதில்லை யாகம்.
திங்கள், 14 பிப்ரவரி, 2011
வாழ்க்கை
வாழ்க்கையில் வேதனைகளைத் தவிர்க்க முடியாது.துன்பங்களும்,துயரங்களும்
வாழ்க்கையில் ஒரு அங்கமாகவே இருக்கின்றன.எத்தனையோ கஷ்டங்களை நாம் அனுபவிக்கின்றோம்.எத்தனையோ துயரங்களைச் சந்திக்கிறோம்.
இவ்வளவு கஷ்டங்கள் நமக்கு ஏன் ஏற்பட வேண்டும் எனச் சிந்திக்கிறோம்.
வேதனைகள் அனுபவங்களாக மாற வேண்டும். வேதனையை அனுபவித்தால் மட்டும் பயனில்லை.வேதனை ஏன் ஏற்பட்டது,அதை எந்த வழிகளில் தவிர்த்திருக்கலாம் என்றெல்லாம் யோசிக்கும்போதுதான் அது அனுபவமாகிறது.துன்பங்களிலிருந்து பாடம் கற்றுக் கொள்வதுதான் அனுபவம்.
அந்தப் பாடம் என்பது உண்மையை உணர்தல்.
இது தான் தீர்வு!எல்லாப் பிரச்சனைகளையும் இதி தீர்க்கும்.கேட்பதற்கு ஏதோ தத்துவம் போலத் தோன்றினாலும் இதுதான் உண்மை.
வாழ்க்கையில் ஒரு அங்கமாகவே இருக்கின்றன.எத்தனையோ கஷ்டங்களை நாம் அனுபவிக்கின்றோம்.எத்தனையோ துயரங்களைச் சந்திக்கிறோம்.
இவ்வளவு கஷ்டங்கள் நமக்கு ஏன் ஏற்பட வேண்டும் எனச் சிந்திக்கிறோம்.
வேதனைகள் அனுபவங்களாக மாற வேண்டும். வேதனையை அனுபவித்தால் மட்டும் பயனில்லை.வேதனை ஏன் ஏற்பட்டது,அதை எந்த வழிகளில் தவிர்த்திருக்கலாம் என்றெல்லாம் யோசிக்கும்போதுதான் அது அனுபவமாகிறது.துன்பங்களிலிருந்து பாடம் கற்றுக் கொள்வதுதான் அனுபவம்.
அந்தப் பாடம் என்பது உண்மையை உணர்தல்.
இது தான் தீர்வு!எல்லாப் பிரச்சனைகளையும் இதி தீர்க்கும்.கேட்பதற்கு ஏதோ தத்துவம் போலத் தோன்றினாலும் இதுதான் உண்மை.
வெள்ளி, 11 பிப்ரவரி, 2011
கடவுள்
கடவுள் எல்லா இடங்களில் இருந்தாலும் அவரை நல்ல மனிதப்பண்புகளின் மூலமே நாம் அறிய முடியும்.
ஜெர்மன் நாட்டு சமுதாயப் பேராசிரியர் மேக்ஸ் வெபர் கூறுகிறார்,''உலகம் திருத்தமுடியாத அளவுக்குக் கேவலம் அடைந்த போதிலும்,அடிமுட்டாள்களாக மக்கள் நடந்து கொண்ட போதிலும் அதைக் கண்டு ஆயாசப்படாமல் ,எப்படியிருந்தாலும் சரி என்று எவன் நம்பிக்கையுடன் செயல்படுகிறானோ அவன் அந்தராத்மாவில் அழைப்பு இருந்து கொண்டே இருக்கிறது''.பெருந்தலைவர்கள் பலரும் அத்தகைய அந்தராத்மாவின் குரலைக் கேட்டவர்கள் தான்.
ஜெர்மன் நாட்டு சமுதாயப் பேராசிரியர் மேக்ஸ் வெபர் கூறுகிறார்,''உலகம் திருத்தமுடியாத அளவுக்குக் கேவலம் அடைந்த போதிலும்,அடிமுட்டாள்களாக மக்கள் நடந்து கொண்ட போதிலும் அதைக் கண்டு ஆயாசப்படாமல் ,எப்படியிருந்தாலும் சரி என்று எவன் நம்பிக்கையுடன் செயல்படுகிறானோ அவன் அந்தராத்மாவில் அழைப்பு இருந்து கொண்டே இருக்கிறது''.பெருந்தலைவர்கள் பலரும் அத்தகைய அந்தராத்மாவின் குரலைக் கேட்டவர்கள் தான்.
சனி, 5 பிப்ரவரி, 2011
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)