ஞாயிறு, 12 பிப்ரவரி, 2012

எங்கள் குடும்பம்


வாழ்வு என்பது சமுத்திரத்திற்கு ஒப்பாகச் சொல்லப் படுகிறது.அதிலும் குடும்ப வாழ்வு என்பது ஆழ்கடலில் மூழ்கி முத்தெடுப்பது போன்றது.
கவனமாய் மூச்சடக்கி முக்குளித்தால் முத்தெடுக்கலாம்.கவனம் பிசகினால் மூழ்கிப் போக நேரும்.வாழ்வின் எந்தவொரு கட்டத்திலும் சிரமம் நேர்ந்தாலும்,
நம் சிறப்பான செயல்பாட்டின் மூலம் சிகரம் தொடலாம்.செயல்பாடுகள் சீர் குலைந்தால் வாழ்க்கையே கடினமாகிப் போகலாம்.வாழ்க்கைச் சிக்கலைத் தவிர்த்து
சிகரம் தொடும் ஆன்மிக வழிகள் ,
' எங்கள் குடும்பம் ' என்ற புத்தகத்திலே தவத்திரு.கர்மயோகி அவர்களால் சொல்லப் பட்டிருக்கிறது.

1. சுபாவம் மாறாது என்பது மனித வாழ்வு.சுபாவத்தை மாற்ற முயன்று வெற்றி காண்பது அன்னை வாழ்வு.

2. சத்தியம் சோதனைகள் நிறைந்தது என்பது மனித வாழ்வு ,சத்தியம் மட்டுமே சாதனைகளின் திறவுகோல் என்பது
அன்னை வாழ்வு.

3. உலகு எப்போது மாறும் எனக் கேள்வி கேட்பது மனித வாழ்வு ,தாம் மாறினால் அனைத்தும் மாறும் என்பது அன்னை வாழ்வு.

4. பக்குவம் இல்லாததால் மனப் போராட்டம் எழுவது மனித வாழ்வு ,பக்குவப்பட்ட பண்பான நிலையே அன்னை வாழ்வு.

5.புற வெற்றி ,அகக் கட்டுப்பாட்டில் உள்ளது.அகக் கட்டுப்பாட்டை அமைத்துத் தருவது அன்னை வாழ்வு.