ஞாயிறு, 11 மார்ச், 2012

ஆன்மிகத் துளிகள்

   அவரவர்க்கு ஒரு போக்கு உண்டு.அடுத்தவருடைய வாழ்வைச் சரி செய்ய முயன்றால் சிக்கல் எழும்.
                              உதவி செய்தால் உபத்திரவம் வாராமலிராது.உதவி செய்வது என்பது பாம்புக்குப் பால் வார்ப்பது போல.உதவி செய்யும்போது நம் அகந்தைதான் செயல்படுகிறது.
                                      பிரச்சனை என்பது வாய்ப்பு.பிரச்சனைகளை வாய்ப்பாகக் கருதினால் வாய்ப்பு உருவாகும்.
                                                       முயற்சி குறைந்த பட்சம் சாதிக்கும்.ஆர்வம் அதிகபட்சம் பெற்றுத் தரும்.
                                  மனிதன் நினைத்தால் வழி பிறக்கும்.மனதினுள்ளே ஒளி பிறக்கும்.    

வெள்ளி, 9 மார்ச், 2012

ஆத்ம சிந்தனை

             மூதறிஞர் இராஜாஜி தன் 'ஆத்ம சிந்தனையில்' இவ்வாறு கூறுகிறார்.
                                       எப்போதும் வெளிப்புறத்தை விட்டு உள்ளத்தையே கவனிப்பாயாக.அதுவே சாந்தமடைவதற்கு சாதனமாகும்.உலகத்தின் உட்பொருளையும்,அதன் இயல்பையும் அறிந்து அதன் ஒரு பகுதி நாம் என்பதை மறவாதிருக்க வேண்டும்.அயலானைக் கவனிக்கும் போதும் அவன் உள்ளத்தை அறிய வேண்டும்.அப்போது தான் அவன் எதை அறிந்து செய்தான்,எதை அறியாமல் செய்தான்என்று தெரியும்.பிறர் வாழ்க்கைக்கும் நம் வாழ்க்கைக்கும் உள்ள வித்தியாசம் தெரியும்.இது ரோமாபுரிச் சக்கரவர்த்தி மார்க்க அரேலியருடைய சிந்தனை.