புதன், 26 செப்டம்பர், 2012



  • வேண்டியதைக்  கேட்பது   பிரார்த்தனை.

  • கொடுப்பதை  ஏற்பது   சமர்ப்பணம்.

  • ஏற்பவன்   இல்லாமற்  போவது  சரணாகதி.

     கையிலுள்ளவை  கட்டுப்பட்டால்  கையில்  இல்லாதவை
     கட்டுப்படும்.

     கண்ணை  மூடி   உள்ளே  எழுப்பும்  குரல்  கடல்  கடந்து  
     கேட்கும்.

செவ்வாய், 4 செப்டம்பர், 2012

யோக வாழ்க்கை


விளையாட்டில்  தன்னை மறந்தவன் ,ஆசையால் உந்தப்படுபவன்,அந்நிலை

தனக்குரிய அளவு கடந்த சக்தியைப் பெற்றவனாவான்.சக்தி முழுவதும் அது

போல் இறைவனை நோக்கிச் சென்றால் மனித சந்தோஷம்

பிரம்மானந்தமாகும்.

                                          ஒவ்வொரு செயலுக்குரிய திறமை தனித்திருப்பது போல்

அதற்குரிய ஆனந்தம் தனித்துள்ளது.இறைவன் தனக்குரிய ஆனந்தத்தைத்

தருகிறான்.எதை நாம் நாடுகிறோம்,எதை நம்மால் நாட முடிகிறது என்பது நம்

சுபாவத்தைப் பொறுத்தது.