வெள்ளி, 25 மார்ச், 2011

நம்பிக்கை


மனதில் உருவாகும் எண்ணங்களின் மீது நம்பிக்கை வைத்தால்,
அது சாதனையில் முடியும்.
அமைதியான மனம் அடைய வல்லமை வேண்டும்..
நாம் சந்திக்கும் அனைத்து மனிதர்களிடத்தும் ஆரோக்கியம்,மகிழ்ச்சி,வளமை
குறித்துப் பேச வேண்டும்.
நாம் பார்க்கும் அனைத்திலும் நல்லவற்றையே காண வேண்டும்.
சிறந்ததை எண்ண வேண்டும்,சிறந்ததையே செய்ய வேண்டும்.
சிறந்ததை எதிர் நோக்க வேண்டும்.
மற்றவர்களின் வெற்றியை நமது வெற்றியாக நினைத்து மகிழும் மனம்
வேண்டும்.
கடந்த காலத் தவறுகளை மறந்து எதிர்கால வெற்றிக்காக முயல வேண்டும்.
மற்றவர்களிடம் குறை காணுவதில் நேரத்தைச் செலவிடாமல் நம்மை
உயர்த்துவதற்காக நேரம் செலவிட வேண்டும்.
இதை வார்த்தையில் இல்லாமல்,செயலாக்க முற்பட்டால் உலகம் நம்
பக்கம் என்ற நம்பிக்கை மெய்ப்படும்.

திங்கள், 21 மார்ச், 2011

முத்துக்கள் மூன்று

வாழ்க்கை விலை மிகுந்த ஒரு வாய்ப்பு.ஆனால் அதன் மதிப்போ வாழ்வோரைப் 

பொறுத்தது.                                                     -ஓஷோ


ஒழுக்கத்தோடு இருந்தால்,கவலையற்று,அச்சமற்று இருக்கலாம்.
  


வாய்ப்புகளின் ஆரம்பம் முயற்சியின் ஆரம்பத்தில் இருக்கிறது.                                                                                                   

ஞாயிறு, 6 மார்ச், 2011

மதங்கள்

ஸ்ரீ ராமகிருஷ்ணர் 1866ல் கோவிந்தர் என்பவரிடம் இஸ்லாமிய தீட்சை பெற்றார்.கோவிந்தர் இஸ்லாமிய மதத்தில் சூபி வகுப்பைச் சேர்ந்தவர்.ஸ்ரீ ராமகிருஷ்ணர் முஸ்லீம்களைப் போல் உடை தரித்து நேரம் தவறாமல் நமாஸ் ஓதி வந்தார்.மூன்று தினங்களில் அம்மதத்தின் முடிவான அனுபவங்களைப் பெற்றார்.1873ல் இவர் சம்புமல்லிக் என்ற கிறிஸ்துவ பக்தரின் தொடர்பால் அம்மதத்தில் ஈடுபாடு கொண்டார்.ஏசுநாதரின் தரிசனமும் பெற்றார்.