ஆன்மிக ஆனந்தம்
ஆன்மவொளிக் கடலில் மூழ்கித் திளைப்பவர் தமக்கு அச்சமுண்டோடா? - பாரதி
செவ்வாய், 12 மே, 2015
ஸ்ரீ அரவிந்த சுடர்
தீர யோசனை செய்து சேர வேண்டும்.
சேர்ந்தால் பிரியக் கூடாது.
நம்மால் ஆதாயமில்லாவிட்டால் இனி நட்பு நீடிக்காது
என்பது நட்பல்ல.
ஆதாயம் இல்லை என்பதால் விலகக் கூடாது என்ற நல்லெண்ணம் ஆதாயத்தை உற்பத்தி செய்ய வல்லது.
நட்பு நஷ்டத்தைக் கடந்தது.
வியாழன், 16 ஏப்ரல், 2015
ஜீவியத்தின் ஓசை
உடலின் உணர்வாக ஆன்மா வெளிப்படுவது உடல்நலம்.
நல்லெண்ணம் சக்தி வாய்ந்தது.
அது பிறர் வாழ்வை அளவு கடந்து உயர்த்தும்.
நல்லெண்ணம் தரும் பலனில் ஆன்மீகப் பலன் முதன்மையானது.
திங்கள், 23 மார்ச், 2015
ஜீவிய மணி
கற்பனையில் பலிக்கும் கருத்திற்கு நடைமுறையில் உயிர் பெறும் உரிமை உண்டு.
பொருள் வரும் பொழுது அருள் உடன் வரும்.
மனம் செய்யாததை பணம் செய்யாது.
பணம் செய்யாததையும் மனம் செய்யும்.
வெள்ளி, 20 மார்ச், 2015
யோகவாழ்க்கை விளக்கம்
ஆன்ம வளர்ச்சி
ஞான யோகத்திற்கு நிஷ்டை கருவியாவதுபோல்,ஆன்மாவின் வளர்ச்சிக்கு ஆர்வம் கருவியாகிறது.
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)