வெள்ளி, 17 ஆகஸ்ட், 2012
பரசிவவெள்ளம்
மகாகவி அவர்கள் பிரம்மஞானத்தை தாம் பெற்ற சக்தி வாய்ந்த மொழிவளத்தால் அற்புதமாக ''பரசிவவெள்ளம்'' என்ற தலைப்பில் தமிழாக்கியுள்ளார்கள்.இது ஆசான் அருட்தந்தை அவர்கள் அளித்து வரும் பிரம்ம ஞானத்திற்கு அத்தாட்சியாக உள்ளது.அருட்தந்தை அவர்கள் பிரம்மத்தை ''ALL PENETRATIVE,HIGHLY TRANSPARENT IMPERCITABLE ARK FLUID MATTER"என்று வர்ணிக்கிறார்கள்.
FLUID என்பதை நீர் போன்ற ஒரு பொருள் என்று கொள்ளக் கூடாது.எங்கும்,எதிலும் ஊடுருவக் கூடிய புலன் கடந்த இறைவெளியின் ஆற்றல் என்றே கொள்ள வேண்டும்.
வெள் என்றால் தூய்மையான என்று பொருள்.அம் என்றால் பிரணவம் .ம் என்ற மெய் தனித்து ஒலிக்காது என்பதால் மெய்யோடு உயிர் சேர்ந்து அம் என்கிறோம்.உயிரும்,மெய்யும் சேர்ந்தால் உ+அம்=ஓம் என்றும் கூறினார்கள் .இதையே ''பரசிவ வெள்ளம்''என்றார் கவிஞர் பெருமான்.
பகவான் ஸ்ரீஅரவிந்தர் தொடர்பால் ஆன்ம ஒளி பெற்றார்.
திங்கள், 13 ஆகஸ்ட், 2012
பரசிவ வெள்ளம்
பாரதத் திருநாட்டில் புதிய மறுமலர்ச்சிக்கு வித்தூன்றிய பெருமகனார்களில் ஒருவர் மகாகவி பாரதியார்.தமிழ்நாட்டின் தவப்பயனாய் எட்டையபுரத்தில் தோன்றிய தெய்வீகக் கவிஞராவார்.காலத்தின் கட்டாயமாக நாட்டில் சுதந்திர எழுச்சியை மக்களிடையே அவர் ஊன்றி வந்ததால் அவர் ஓர் சுதந்திரக் கவியாகவே சித்தரிக்கப்பட்டார்.அதனால் அவர் ஓர் மெய்ப்பொருள் உணர்ந்த மகான் என்பதையோ,பிரம்மத்தை உணர்ந்த ஞானி என்பதையோ மக்களில் பலர் அறிந்திருக்கவில்லை.மெய்ப்பொருள் பற்றிய அற்புதமான கவிதைகளையும் உணர்ந்தோமில்லை.காணும் காட்சிஎல்லாம் தெய்வநிலையே என்பதை கவி அவர்கள்,
பாழுந் தெய்வம் பதியுந் தெய்வம்
பாலை வனமும் கடலும் தெய்வம்
ஏழு புவியும் தெய்வம் தெய்வம்
எங்கும் தெய்வம் எதுவுந் தெய்வம்
என்று தனக்கே உரித்தான தமிழில் முழங்கினார்.
நன்றி;அன்பு நெறி
பாழுந் தெய்வம் பதியுந் தெய்வம்
பாலை வனமும் கடலும் தெய்வம்
ஏழு புவியும் தெய்வம் தெய்வம்
எங்கும் தெய்வம் எதுவுந் தெய்வம்
என்று தனக்கே உரித்தான தமிழில் முழங்கினார்.
நன்றி;அன்பு நெறி
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)