வெள்ளி, 25 மார்ச், 2011

நம்பிக்கை


மனதில் உருவாகும் எண்ணங்களின் மீது நம்பிக்கை வைத்தால்,
அது சாதனையில் முடியும்.
அமைதியான மனம் அடைய வல்லமை வேண்டும்..
நாம் சந்திக்கும் அனைத்து மனிதர்களிடத்தும் ஆரோக்கியம்,மகிழ்ச்சி,வளமை
குறித்துப் பேச வேண்டும்.
நாம் பார்க்கும் அனைத்திலும் நல்லவற்றையே காண வேண்டும்.
சிறந்ததை எண்ண வேண்டும்,சிறந்ததையே செய்ய வேண்டும்.
சிறந்ததை எதிர் நோக்க வேண்டும்.
மற்றவர்களின் வெற்றியை நமது வெற்றியாக நினைத்து மகிழும் மனம்
வேண்டும்.
கடந்த காலத் தவறுகளை மறந்து எதிர்கால வெற்றிக்காக முயல வேண்டும்.
மற்றவர்களிடம் குறை காணுவதில் நேரத்தைச் செலவிடாமல் நம்மை
உயர்த்துவதற்காக நேரம் செலவிட வேண்டும்.
இதை வார்த்தையில் இல்லாமல்,செயலாக்க முற்பட்டால் உலகம் நம்
பக்கம் என்ற நம்பிக்கை மெய்ப்படும்.

2 கருத்துகள்: