பாரதத் திருநாட்டில் புதிய மறுமலர்ச்சிக்கு வித்தூன்றிய பெருமகனார்களில் ஒருவர் மகாகவி பாரதியார்.தமிழ்நாட்டின் தவப்பயனாய் எட்டையபுரத்தில் தோன்றிய தெய்வீகக் கவிஞராவார்.காலத்தின் கட்டாயமாக நாட்டில் சுதந்திர எழுச்சியை மக்களிடையே அவர் ஊன்றி வந்ததால் அவர் ஓர் சுதந்திரக் கவியாகவே சித்தரிக்கப்பட்டார்.அதனால் அவர் ஓர் மெய்ப்பொருள் உணர்ந்த மகான் என்பதையோ,பிரம்மத்தை உணர்ந்த ஞானி என்பதையோ மக்களில் பலர் அறிந்திருக்கவில்லை.மெய்ப்பொருள் பற்றிய அற்புதமான கவிதைகளையும் உணர்ந்தோமில்லை.காணும் காட்சிஎல்லாம் தெய்வநிலையே என்பதை கவி அவர்கள்,
பாழுந் தெய்வம் பதியுந் தெய்வம்
பாலை வனமும் கடலும் தெய்வம்
ஏழு புவியும் தெய்வம் தெய்வம்
எங்கும் தெய்வம் எதுவுந் தெய்வம்
என்று தனக்கே உரித்தான தமிழில் முழங்கினார்.
நன்றி;அன்பு நெறி
அருமை... அருமை..
பதிலளிநீக்குபகிர்வுக்கு நன்றி சகோதரி...
தொடருங்கள்... வாழ்த்துக்கள்... நன்றி…